கை நிறைய விறலிருந்தும்
விறல் நிறைய மோதிரம் தேடும் நீ ஏனோ - சிந்திக்கவில்லை
கையின்றி ஊனமாய்
செல்லும் மனிதனைப்பற்றி………
நான்கு சுவரிருந்தும் சுவர் தாங்கும் கூரையிருந்தும்
அடுத்த மாடியை கட்ட பிரயாத்தனப்படும் - நீ
ஏனோ சிந்திக்கவில்லை
வானமே கூரையாகவும் நிலமே வீடாகவும்
வாழும் மனிதனைப்பற்றி………..
கை நிறைய சம்பளமும் வயிறு நிறைய
போஜனமும் தினம் காணும் -
நீ
வங்கி சேமிப்பை யோசிக்கையில்
ஏனோ - சிந்திக்கவில்லை
அரை வயிறே தன் சேமிப்பாய் வாடும் மனிதனைப்பற்றி……
மனிதா! நீ சிந்திக்க மறப்பினும்
ஒரு நாள் சந்திப்பாய்,
உனக்கான ரஹ்மத்துக்களை வாரி வழங்கிய - ரஹ்மானை
அந்நாள் நீ கலங்குவாய்
ஏனோ இதுநாள் வரை நாம்
-சிந்திக்க மறந்தோம் என.
No comments:
Post a Comment